Monday, February 13, 2006

இரசாயன பொறியியலாளர்கள் உருவான வகுப்பறை

காலை ஒன்பது மணி - 48 பேர் கொண்ட அறை ;
பேருந்து தடங்கலெனச் சாக்கு கூறி பதற்றத்துடன் நுழைவான் லட்சுமி நரசிம்மன்;
அவனையொட்டிக்; கொண்டு அதே காரணத்தோடு நுழைவான் பைக்கில் பறந்து வந்த அருள்;
நேரம் கழித்து வந்தும் தப்பித்தவர்களையெண்ணி குமுறுவான் டிபார்ட்மெண்டு திறக்குமின்னே வந்த மகேஷ்;
எந்தக் கவலையுமின்றி மேசைக்கீழ் மறைத்து வைத்து ஜp.ஆர்.இ படிப்பாள் சோணh
தான் இவ்வறையில் தவிப்பதற்கு காரணம் ஹெச்.ஓ.டி எனச் சாதிப்பான் நிர்மல் ;
தேநீர் இடைவேளையில் சென்று கடலைப்போட ஜுனியர் வகுப்பு; தேர்வு செய்வான்; கமலேஷ் ;
கமல்ஹhசனுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையை அளந்து கொண்டிருப்பான் ஈஷ்வர் ;
இவர்களுக்கள்ளாம் எவன் கல்லுரியில் இடம் கொடுத்தான் எனப் பார்வையாலே அலுத்துக்கொள்வாள் மஞ்சு;
கருப்புப் பலகையில் தோன்றும் வெள்ளையெழுத்துக்களை ஒன்றுவிடாமல் புத்த்கத்தில் பதிவுச்செய்துக் கொள்வார்கள் பாஸ்கரனும் கார்த்திகேயனும்;
அப்பொழுதே அப்புத்தகங்களை சிராக்ஸ் செய்ய முடிவுசெய்துவிடும் ஒரு கூட்டம் ;
மணி ஒன்பது ஐம்பது – “பரோட்டா குருமா மணமும்”; “கைத்தவறி கீழே விழுந்த டிபின் பாக்ஸ் மூடி ஏற்ப்படுத்தியச் சத்தமும்” கடமையாற்றிக் கொண்டிருக்கும் அந்நியன் வெளியேற சமிக்ஞைகள்;
பாடத்தை கோட்டைவிட்டு இவையனத்தையும் கவனித்தவன் நான்.


----- கார்த்திக் ஜெ.

No comments: