Tuesday, February 20, 2007

ஈகை

ஆர்குட் மூலம் உருவாகி இயங்கி வரும் "அமெரிக்காவில் வாழும் தமிழர்கள்" இயக்கம், http://www.orkut.com/Community.aspx?cmm=19027986
ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் வாழும் ஏழ்மையான நபர் ஒருவர்க்கு உதவி செய்ய முடிவு செய்தது. அதற்காக "ஈகை" எனும் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

எங்களின் அடிப்படை வேண்டுகோள் :

தினம் 3.3 சென்ட்ஸ்(cents) என்ற கணக்கில் மாதம் 1 டாலர் நன்கொடை அளியுங்கள்.

கீழே குறியிட்டுள்ள வலை தொடர்பை பற்றுக

http://www.karthikjayaraman.com/egai.php


க்ரிடெட் கார்ட் (credit card) நுட்பம் சம்பந்தபட்ட விஷயங்களால், தற்பொழுது குறைந்த அளவாக ஐந்து டாலர்கள் நன்கொடை அளிக்க வேண்டும்.

பிறகு ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் நன்கொடை அளியுங்கள்.

தங்களால் இயலுமானால் ஒவ்வொரு மாதமும் ஐந்து டாலர்கள் அல்லது ஐந்து டாலர்களுக்கு மேல் நன்கொடை அளியுங்கள்.

நன்கொடை நடவடிக்கைகள் அனைத்தையும் ,எங்களால் முடிந்த அளவு தங்களுக்கு ஈ-மெயில் மூலம் தெரிவிப்போம்.

இந்த மாதம் நாம் உதவி செய்ய போகும் நபர்:

http://saverevathy.blogspot.com/


நன்றி
"அமெரிக்காவில் வாழும் தமிழர்கள்"