Wednesday, March 21, 2007

An afternoon walk -

On a day not too hot,not too cold,
Just like my mood;
Amidst trees awaiting to embrace new relations,
Just like my soul;
On the snow piled boulevard,
Just like my burdened mind;
Suddenly,
Emerged a bright star miles away,
Melting away the white mountains;
So did emerge a hope within me,
Wiping out my worries.

Sunday, March 18, 2007

லஞ்ச்

மார்ச் 5 2007. லஞ்சுக்கு தஞ்சாவூர் குஸைனுக்கு சென்று தனக்கு பிடித்தமான சிக்னேசர் காய்கறி ரைஸ் சாப்பிடலமா, தோசா க்ரில்லுக்கு சென்று புல் மீல்ஸ் அடிக்கலமா,பெங்களூர் எக்ஸ்பிரஸ் சென்று தக்காளி சாதம் கட்டலாமா,உடுப்பி சென்று அவியல்-ரைஸ் அமுக்கலாமா என்ற சிந்தனையில் இருந்தான் ராகுல். நியுஜெர்சியில் தென்னிந்திய ஹோட்டலுக்கு பஞ்சமே இல்லை.அதுவும் ரவுட் 1- ரவுட் 27 அருகில் அலுவலகம் அமைந்ததற்கு ராகுல் பலமுறை கடவுளுக்கு நன்றி கூறியிருக்கிறான்.

லஞ்சுக்கு புறப்படுமுன்னே, மதியம் உள்ள வேலைகளை அறிய காலென்டரை ஓபன் செய்ய, மதியம் ஒரு மணிக்கு மீட்டிங் இருந்தது. உடுப்பி, தஞ்சாவூர்,பெங்களூர் பயணங்கள் அனைத்தும் ரத்து.

ராகுலின் கால்கள், அலுவலக பான்ட்ரி நோக்கி விரைந்தன. அவசர பசி வந்தால் வேண்டுமென ஒரு பாக்கெட் ப்ரெட்டும், பட்டரும், ஒரு பாட்டில் ஜாமும் வாங்கி வைத்திருந்தான். அவை அனைத்தையும் எடுத்து இரண்டு ப்ரெட்-பட்டர்-ஜாம் சான்ட்விச் தயார் செய்து, ஒரு கிளாஸ் தண்ணீருடன் மக்கள் குறைவாக உள்ள இடத்தில் போய் அமர்ந்தான். செல்போனில் ஒரு முறை மணியை பார்த்துவிட்டு ப்ரெட்-பட்டர்-ஜாமை கையில் எடுத்து வாயில் வைத்தான்.


செப்டம்பர் 1985. பதினைந்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு பெரிய குடியிருப்பு. இரண்டு நாட்களுக்கு வேண்டிய குடிநீரை பிடித்து வைத்து விட்டு, ராகுலின் பாட்டி தாத்தாவிற்கு, 7:30 மணி காப்பி கொடுத்துவிட்டு, ராகுல்,கோகுல் இருவரையும் ரெடி செய்து, லஞ்ச் பாக் செய்துவிட்டு, கிளம்பினால் பத்மா. பத்மாவின் வலது கை பிடியில் ராகுலும், ராகுலின் லஞ்ச் கூடையும்; இடது கை பிடியில் கோகுலும், கோகுலின் லஞ்ச் கூடையும். ராகுல், கோகுல் இருவர் முதுகிலும் அவர்களைவிட சுமை அதிகமான புத்தக மூட்டைகள். ராகுல் முதலாம் வகுப்பு. கோகுல் ல்.கே.ஜி

வீட்டிலிருந்து பள்ளிக்கு பதினைந்து நிமிடம் நடை. திநகர் உஸ்மான் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார்கள்.ராகுலின் பார்வை சென்ற மாதம் அப்பாவுடன் சென்ற பேக்கரி நோக்கி பதிந்தது. ஒரு முறை லஞ்சுக்கு பண்-பட்டர்-ஜாம் வாங்கி தருவதாக அப்பா கூறியது நினைவிற்கு வந்தது. இன்று அம்மா ஏற்கனவே லஞ்சுக்கு தக்காளி சாதம் பாக் செய்ததும் நினைவில் இருந்தது. என்ன தூண்டியதோ ராகுலை, அம்மாவிடம் பண்-பட்டர்-ஜாமுக்கு அடி போட்டான்.மூன்று முறை பொறுமையாக இன்னொரு நாள் என பத்மா கூறி வந்தாள். பத்மாவின் குரலில் வழக்கமாக கொஞ்சும் பொழுது இருக்கும் ஆசை குரலும் இல்லை; எச்சரிக்கும் பொழுது இருக்கும் கண்டிப்பு குரலும் இல்லை. பேக்கரியை கடந்து ஐந்து நிமிடமாகிவிட்டது.இனிமேல் அம்மா பண்-பட்டர்-ஜாம் வாங்கி தர முடிவு செய்தால் ஸ்கூலுக்கு நேரத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்தும் ராகுல் திரும்பவும் அம்மாவிடம் கேட்டான். கோகுல் வாய் திறக்காமல் வந்து கொண்டிருந்தான். தனது வலது கையை பத்மாவிடமிருந்து விடுவித்துக்கொண்டு புத்தக மூட்டையைச் சரி செய்வதுபோல் பாவனை செய்துவிட்டு, அம்மாவைச் சுற்றி ராகுலின் தோளை தட்டினான். ராகுல் அதை பொருட்படுத்தவில்லை. பள்ளி சென்றடையும் வரை கேட்டுக்கொண்டே வந்தான். பத்மா நடை வேகத்தை அதிகரித்தாலே தவிர, பதில் எதுவும் பேசவில்லை. கோகுலை அவன் பிள்டிங்கில் விட்டுவிட்டு ராகுல் பிள்டிங் நோக்கி நடந்தாள். ராகுல் கிளாஸ் ஜன்னல் அருகே நின்று கொண்டு ராகுலுக்கு பண்-பட்டர்-ஜாம் வாங்கி தராத காரணத்தை கூறினாள். ஐந்து நிமிடம் கழித்து ராகுல் வகுப்புக்குள் சென்று விட்டான். மாதத்தில் ஏழாம் தேதி பிறப்பதற்கும் தனக்கு பண்-பட்டர்-ஜாம் கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று ராகுலுக்கு புரியவில்லை.

அன்று மதியம் நண்பர்களுடன் அமர்ந்து லஞ்ச் சாப்பிடும் பொழுது, அருண்,அன்பான தோழமையோடு ராகுல் அருகே வந்து "எதுக்குடா உங்க அம்மா காலையிலே படி இறங்கி போறப்ப அழுதுகிட்டே போனாங்க?" என்று கேட்டான். அன்று தக்காளி சாதத்தை ராகுல் மிகவும் விரும்பி சாப்பிட்டான்.

மார்ச் 5 2007. மனதிற்குள் அம்மாவை நினைத்து சிறிதாக புன்னகைத்துவிட்டு இன்று ப்ரெட்-பட்டர்-ஜாமை மிகவும் விரும்பி சாப்பிட்டான்.

Sunday, March 11, 2007

பார்வை எங்கே

பார்வை எங்கே





Above was a competetion announce in Kalki.
I wrote 2 three liners related to the photo .
It was not selected. I thought I would post it here.

டாக்டர் கலாம்

I wrote the following for a competition(write two lines in praise of our president) that came in Kalki. It was not selected. I thought I would post it here.

Karthik

விஞ்ஞானத்தை ஊடகமாக்கி மாணவமணிகளின் ஆற்றலை எரிபொருளாக்கி
இந்தியாவை வல்லரசு நாடாக்க முனையும் டாக்டர் கலாமுக்கு சலாம்.

Tuesday, February 20, 2007

ஈகை

ஆர்குட் மூலம் உருவாகி இயங்கி வரும் "அமெரிக்காவில் வாழும் தமிழர்கள்" இயக்கம், http://www.orkut.com/Community.aspx?cmm=19027986
ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் வாழும் ஏழ்மையான நபர் ஒருவர்க்கு உதவி செய்ய முடிவு செய்தது. அதற்காக "ஈகை" எனும் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

எங்களின் அடிப்படை வேண்டுகோள் :

தினம் 3.3 சென்ட்ஸ்(cents) என்ற கணக்கில் மாதம் 1 டாலர் நன்கொடை அளியுங்கள்.

கீழே குறியிட்டுள்ள வலை தொடர்பை பற்றுக

http://www.karthikjayaraman.com/egai.php


க்ரிடெட் கார்ட் (credit card) நுட்பம் சம்பந்தபட்ட விஷயங்களால், தற்பொழுது குறைந்த அளவாக ஐந்து டாலர்கள் நன்கொடை அளிக்க வேண்டும்.

பிறகு ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் நன்கொடை அளியுங்கள்.

தங்களால் இயலுமானால் ஒவ்வொரு மாதமும் ஐந்து டாலர்கள் அல்லது ஐந்து டாலர்களுக்கு மேல் நன்கொடை அளியுங்கள்.

நன்கொடை நடவடிக்கைகள் அனைத்தையும் ,எங்களால் முடிந்த அளவு தங்களுக்கு ஈ-மெயில் மூலம் தெரிவிப்போம்.

இந்த மாதம் நாம் உதவி செய்ய போகும் நபர்:

http://saverevathy.blogspot.com/


நன்றி
"அமெரிக்காவில் வாழும் தமிழர்கள்"

Wednesday, January 31, 2007

என் அந்நியனின் பார்வையில்

Note: Originally written in English by ANKEETA; translated in Tamil by Kaarththik.



என் அந்நியனின் பார்வையில்

முத்தமிட்டேன் அவன்
ஈர உதடுகளின் பேசாத ரகசியத்தை
பாதுகாப்பான அவன் கைகளில் சாய்ந்தபடி,
இயல்பிழந்த காதலி போல்
ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடி.

படபடக்கும் பட்டாம்பூச்சிகள் கிசுகிசுபூட்டின
என்னுள் இருந்த கேலிக்கை வேட்கையை,
அவன் சிரிப்பில் வெட்கப்பட்டு
மழலையாக சிரித்து முறைக்கையில்.

மெதுவாக..
இரகசியமாக பதுங்கினேன் அவன் உலகத்தில்
புதிய சூரியவெளிச்சத்தோடு,
துயர் மழையில்.


அவனுடைய விரல்களை பின்னினான்
என் விரல்களோடு,
மேலும் என் ஆத்மாவின் வாசனையை
மென்மையாக சுவாசித்தான்
என் துயர நினைவுகளை அழிப்பதற்கே.


ஒரு மென்மையான இடைவெளி பொழுதில்
இருவரின் சுவாசமும் உறைந்தன
"நான் உன்னை நேசிக்கிறேன்" என மொழிவதற்கு.
ஒரு நொடி
நாங்கள் வாழ்ந்தோம்,நம்பிக்கையின் போர்வையில்
கட்டி பிடித்துக்கொண்டு தொலைந்த காதலர்களை போல்.

காம இச்சையுள்ள சிறு முத்துக்கள் தெளித்தன
என் சிறிய இதயத்தில்,
மாலை பொழுது, அன்பின் வண்ணங்களில்
உருகும் வரை.

நான் மூழ்கிக்கொண்டே போனேன்
நிரந்தரமாக
என் அந்நியனின் பார்வையில்

All rights reserved, © ANKEETA.



In My Stranger's Eyes




I kissed the silent whispers
from his molten lips,
lying safe in his arms.
like a helpless lover
breathing a deep sigh of relief.

Bubbling butterflies tickled
the mischief inside me.
as I giggled and stared
at the blush of his smile

Slowly...
I sneaked into his world
with a new sunlight
in bitter rains

while he laced his fingers
in mine
and softly touched the scent
of my bosom
only to erase my dark memories

Within a tender pause
our breaths froze
to say, "I love you"
A moment
We lived, on the bed of hopes
cuddling like lost lovers.

sensual trinkets spilled
in my little heart
till the dusk melted
in colors of love,

I kept drowning
forever
in my stranger's eyes

All rights reserved, © ANKEETA

Friday, January 26, 2007

திறவுகோல்

மரம் செடி கொடிகள் செழிக்க, எதிர்பார்ப்பின்றி
அன்பு கிரணங்கள் நீட்டும் தன்னலமற்ற ஆதவனைப்போல்;
வறுமையில் வாழும் உடன்பிறந்தோர் மேம்பட‌,
இரும்பு பெட்டியின் சாவியை நீட்ட வேண்டும்
இம்மண்ணின் செல்வந்தர்கள்!

Friday, November 03, 2006

அன்பே சிவம்

Friends
Most of us would have seen the movie "Anbe Sivam"(Kamalhasan - Madhavan). I have listened to the "Anbe sivam" song several times but recently spent time understanding the lyrics deeply and wrote it. Here is the song in tamil for those who like to read. this song is written by 'Kaviyarasu' Vairamuthu. Especially pay attention to the bold lines!

யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்.
நாத்திகம் பேசும் நல்லவர்க்கோ அன்பே சிவமாகும்.

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!


யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதழல் நின்றுவிடும்.
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்.

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!


யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
அன்பின் பாதை சேர்ந்தவர்க்கு முடிவே இல்லையடா.
மனதின் நீள‌ம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா.

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!